இயல்பான சூழலில் மனிதரும் விலங்குகளும் கொண்டுள்ள தொடர்புகள், மேலும் மனிதர்கள் ஒரு விலங்கு கூட்டத்தை எப்படிப் பொறுப்பேற்று கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து படம் முன்வைக்கும் கோட்பாடுகள், சிறிது நம்பிக்கையை நிறுத்தி ரசிக்க வைக்கிறது.
கிஷ்கிந்தாகாண்டத்திற்குப் பிறகு டின்ஜித் அய்யத்தான் இயக்கிய, மேலும் கிஷ்கிந்தாகாண்டம் மற்றும் கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2-க்குப் பிறகு பாஹுல் ரமேஷ் திரைக்கதை எழுதிய இந்தப் படத்தில் சந்தீப் பிரதீப், வினீத், அசோகன், நரேன், பினு பப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அரிதான நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து அவற்றை விற்கும் நபராக இருப்பவர் சவுரப் சச்தேவா (குரியேச்சன்). அவரது நண்பராக வரும் வினீத் இருவரும் சேர்ந்து மலேசியாவிற்கு அரிதான ஒரு நாய் இனத்தை தேடிச் செல்கின்றனர். அங்கு நடக்கும் காட்சிகள் மிரட்டல். நாய்களை ஒவ்வொருமுறையும் க்ளோசப்பில் காட்டும்போது நாம் பயப்படாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு நாய்களின் ஆக்ரோஷத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. பின்னணி இசை பல இடங்களில் மிரட்டுகிறது.
காட்டுக்குன்னு என்ற மலையின் மேல் தனியான வீட்டில் வசிக்கிறார் மலாத்தி சேத்தாத்தி என்கிற வயதான பெண். அவரைப் பார்த்துக்கொள்ள பீயூஸ் (சந்தீப் பிரதீப்) என்ற இளைஞர் அங்கேயே தங்கியிருக்கிறார்.மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதுடன், மலாத்தியின் மகன் அனுப்பும் பணத்தை வாங்கிக் கொள்கிறார். இந்த சூழலில் மோகன் போத்தன் (வினீத்) ஒரு வேலையாக அந்தப் பகுதிக்கு வந்து தனியாக, காட்டுப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்குகிறார். அரிய இன நாய்கள் கதை சொல்லல் முழுவதும் முக்கிய பங்கு வகிப்பதோடு, சில இடங்களில் கதையைத் தாமே முன்னெடுத்து செல்கின்றன.
கதையின் பெரும்பகுதி உருவாகும் காட்டு நிலப்பரப்பு மற்றும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் மர்மத்தை உருவாக்க உதவுகின்றன. இவற்றுடன் காணாமல் போன குரியச்சன் பற்றிய கட்டுக்கதைகளும் சேர்க்கப்படுவது பார்ப்பவர்களுக்கு ஆர்வதை கூட்டுகிறது.

மூன்று மாதங்களுக்கு பின் அவர் கொல்லப்படுகிறார். ஆனால் உடல் கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து நரேன் இதுகுறித்து விசாரிக்க அங்கு வருகிறார். அவர் பீயூஸ் உட்பட சிலரிடம் விசாரிக்கிறார். ஆனால் அவர் வந்ததன் நோக்கம் குரியாச்சன் குறித்து தெரிந்துகொள்ளதான். குரியேச்சன் அந்த பகுதியில் மறைந்து வாழ்வதாக பலரும் நம்புகிறார்கள். நிறைய பேர் அவரைத் தேடுகிறார்கள்.அவருக்கும் மலாத்திக்கும் என்ன சம்பந்தம்? ஏன் பலரும் அவரைத் தேடுகிறார்கள்? மோகன் போத்தனை கொன்றது யார் என்ற பல கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.
அமைதியான இளைஞராக அறிமுகமாகி ஆக்ரோஷம் காட்டும் இடங்களில் சந்தீப் நடிப்பில் மிரட்டுகிறார். வினீத்திற்கு நல்ல நெகட்டிவ் ரோல்.
மலாத்தி கதாபாத்திரத்தில் பியானா மொமின் யதார்த்தை நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். கிளைமேக்சில் சந்தீப் சண்டையிடும் காட்சி பரபரப்பின் உச்சம். இறுதிவரை சில சஸ்பென்ஸ்களை மெய்ன்டெய்ன்ட் செய்ததில் ஜெயிக்கிறார் இயக்குநர் தின்ஜித். நிறைய காட்சிகள் வசனங்களிலேயே கடத்தப்படுகிறது. என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? என்ற கேள்விகளை முதல்பாதியில் கொடுத்து, இரண்டாம் பாதியில் முடிச்சுகளை அவிழ்க்கும்போது பிரம்மிப்பாக உள்ளது.
பாதுகாப்பிற்கும், கட்டுப்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமை என்று சவுரப் கூறும் ஒரு வசனம் கிளைமேக்சில் லிங்க் ஆவது மிரட்டல். குரியேச்சனை ஏன் எல்லாரும் தேடுகிறார்கள் என்பதை நன்றாக விளக்கியிருக்கலாம். புத்திசாலித்தனமாக நம் கவனத்தை பல்வேறு தொடர்பில்லாத இழைகள் மற்றும் கதாபாத்திரங்கள் வழியாக செலுத்துகிறது, ஆனால் அவை அனைத்தும் மெதுவாக ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வெளிப்படுத்துகின்றன. இயல்பான சூழலில் மனிதரும் விலங்குகளும் கொண்டுள்ள தொடர்புகள், மேலும் மனிதர்கள் ஒரு விலங்கு கூட்டத்தை எப்படிப் பொறுப்பேற்று கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து படம் முன்வைக்கும் கோட்பாடுகள், சிறிது நம்பிக்கையை நிறுத்தி ரசிக்க வைக்கிறது. ஒரு மனித அற மனநிலையினை கதையை மையமாகக் கொண்ட ஒரு ‘கிஷ்கிந்தா காண்டத்தின்’ உணர்ச்சி ஈர்ப்பு இதில் இல்லாவிட்டாலும், விலங்குகளும் அவற்றின் நடத்தையும் கூட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமான, உவமை திரைக்கதையுடன் எக்கோ அதை ஈடுசெய்கிறது. கதையின் போக்கு தொடர்ந்து கதாபாத்திரங்களின் நோக்கங்களை கேள்விக்குள்ளாக்குகிறது, அதே நேரத்தில் நமது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்கிறது.











