பாரதியார் கட்டுரை | Bharathiyar Katturai in Tamil

By Krishna Priya

Published on:

Follow Us
Bharathiyar Katturai in Tamil

பிறப்பு        : 11.12.1882 (எட்டயபுரம்- தூத்துக்குடி மாவட்டம்)

மறைவு       : 12.09.1921 (சென்னை)

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882-இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887-ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரின் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897-ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898-ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார்.

இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 

1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904-ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

பாரதி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.

 பதினோராம் வயதில் எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் சபையில் பாரதி பட்டம்.  திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பு. அலகபாத் பல்கலைக் கழகத்தில் பட்ட நுழைவுப் படிப்பில் தேர்ச்சி.  1904இல் மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதர். 

பின்னர் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவியாசிரியர். சக்கரவர்த்தினி மாதப்பத்திரிகையில் ஆசிரியர். 1906 இந்தியா வாரப்பத்திரிகை யின் பொறுப்பாசிரியர். 

பால பாரதா ஆங்கிலப் பத்திரிகைத் தொடக்கம். முதல் கவிதை நூல் ஸ்வதேச கீதங்கள் 1908இல் வெளியாகிறது.  1908 இந்தியா பத்திரிகையின் அதிகாரபூர்வ ஆசிரியர் என்ற நிலையில் பாரதிமீது  ஆங்கில அரசாங்கம் கைது வாரண்டு பிறப்பிக்கிறது.

 புதுவைக்குத் தப்பிச் சென்று 1918வரை அங்கேயே இருந்தார். அரவிந்த கோஷ், வ.வே.சு. அய்யர் இவர்களோடு தொடர்ப்பு ஏற்படுகிறது.   1918 முதல் 1920 வரை கடையம் வாசம். நூற்றுக்கணக்கான  சிறு கவிதைகளோடு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் ஆகிய தொடர்கவிதைகளையும் எழுதியுள்ளார்

சின்னச் சங்கரன் கதை, ஞான ரதம், சந்திரிகையின் கதை போன்ற குறுங்கதைகளையும் பல குட்டிக்கதைகளும் எழுதியுள்ளார். தாகூரின் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். 

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்

தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.

குயில் பாட்டுகண்ணன் பாட்டுபாப்பா‌ பாட்டு
விநாயகர் நான்மணிமாலைசுயசரிதை (பாரதியார்)தேசிய கீதங்கள்
பாரதி அறுபத்தாறுதோத்திரப் பாடல்கள்விடுதலைப் பாடல்கள்
பதஞ்சலியோக சூத்திரம்பாரதியார் பகவத் கீதை (பேருரை)ஞானப் பாடல்கள்
நவதந்திரக்கதைகள்இந்தியாசந்திரிகையின் கதைபகவத் கீதை
ஞான ரதம்சின்னஞ்சிறு கிளியேஉத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு

தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.

பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார்.

சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 – ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 – மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆணாதிக்கம் அதிகமாக இருந்தபோது பெண் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர். அதாவது பெண்கள் படிக்கக்கூடாது, குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமைகள் போன்றவற்றிற்காக பெண்கள் விடுதலை கும்மி எனும் நூலை இயற்றி அதில்“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்” என்று பாடியவர்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட மாந்தர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக “வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்ற வரிகள் மூலம் தனது கருத்தை வெளியிட்டவர்.இனப் பாகுபாடு, மத பாகுபாடு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றிற்காக குரல் கொடுத்தவர் பாரதி ஆவார்.

புதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு 

இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன.

 இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்குப் பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார்.

பிறகு 1921 இல் செப்டம்பர் 11 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார். அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.

Leave a Comment