புத்தரின் இயற்பெயர் | putharin iyar peyar in tamil

By Krishna Priya

Updated on:

Follow Us
putharin iyar peyar in tamil
இயற்பெயர் சித்தார்த்த கௌதமர்
மருவிய பெயர்புத்தர்
பிறந்த ஆண்டு கி.மு.563 
பெற்றோர்சுத்தோதனா கௌதமா மற்றும் மகாமாயா  
பிறந்த இடம்லும்பினி [நேபாளம்]

கி.மு.563 ஆம் ஆண்டு பேரரசரான சுத்தோதனா கௌதமாஅரசருக்கும், மகாமாயா என்ற தம்பதிக்கு மகானாக பிறந்தார் புத்தர் .இது இந்தியாவின் அண்டை நாடாக லும்பினி உள்ளது..புத்தருக்கு அவர்களது பெற்றோர் சூட்டிய  பெயர் சித்தார்த்தர் ஆகும்.

புத்தர் அரச குடும்பத்தில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாளை மிகவும் சிறப்பாக மக்கள் கொண்டாடும் வகையிலும் மற்றும் அயல் நாட்டு இளவரசர்கள் ஞானிகள் போன்ற பல அரச குடும்பத்தாரும் சான்றோர்களும் கலந்து கொண்டனர்.  இளவரசரை அனைவரும் கையில் ஏந்தி வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தனர் அதில் ஒரு ஞானி சித்தர் புத்தரை கையில் ஏந்தி இவர் கண்டிப்பாக பிற்காலத்தில் ஒரு மகனாக உருவெடுப்பார் என்று வாழ்த்தினை தெரிவித்தார்.

புத்தர் பெயர்க்காரணம் அவர் போதி மரத்தடியில் தவம் செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு ஞானம் வந்ததால் இவரை, அவர் சீடர்கள் புத்தர் என்று அழைத்தனர்.புத்தரின் தாயார் அவர் பிறந்து ஏழாவது நாள் அன்று இறந்துவிட்டார் என்றும், புத்தரின் பற்றிய ஆராய்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. இவர் அவரது சித்தியிடம்  வளர்க்கப்பட்டார் என்றும் குறிப்புகள் கூறப்படுகிறது.

புத்தரின் தந்தை சுத்தோதனா கௌதமா புத்தரை,அவரது இளம் வயதில் அவருக்கு எவ்வித வெளியுலக மன அழுத்தம், உழைப்பை பற்றியும் கஷ்டங்களைப் பற்றியும் தெரியப்படுத்தாமல் அவர் அரண்மனைக்குள்ளே அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுத்து, அவரை இளம் 

வயதினை கடத்தி சென்றார்.பக்கத்து நாட்டு இளவரசியே திருமணம் செய்து வைத்தார்.

புத்தருக்கு திருமணம் ஆகும்பொழுது அவருடைய வயது 16 வயதாக இருந்தது அவரது மனைவியின் பெயர் யசோதா என்ற பெண் ஆகும் மற்றும் இவர்கள் இருவருக்கும் ரகுலா என்ற ஒரு அழகான மகனும் பிறந்தார். புத்தர் அனைத்து விதமான செல்வ செழிப்புகளை கொண்டு அவரது அரண்மனையில் மிகவும் அழகான வாழ்க்கையை அவர் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டே இருந்தார்.

புத்தர் மிகவும் அழகான வாழ்க்கையில் தனது அரண்மனைக்குள் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த அழகான வாழ்க்கை அவருக்கு சலிப்பை ஏற்படுத்தியது.அதனால் அவர் வெளியுலகத்தை காண விரும்பினார். அப்பொழுது அவர் மனதில் வெளிஉலக வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் கஷ்டங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

புத்தர் கோட்டையை விட்டு வெளியே செல்ல நினைத்து அவரது உதவியாளரிடம் கூறினார். நான் கோட்டை விட்டு வெளியே செல்ல விரும்புகிறேன் ,இன்று ஒரு நாள் என்னை வெளியே அழைத்து செல் என்று கட்டளையிட்டார்.

அவ்வாறு அவர் வெளியே அவர் சென்று போது சில நிகழுவுகளை அவர் கவனித்தார். 

அரண்மனை விட்டு வெளியே வந்த புத்தர் கவனித்த நிகழ்வுகள்:

  •  ஒரு வயதான தள்ளாடும் கிழவர்
  •  ஒரு நோயாளி
  •  அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்
  •  நாலாவதாக ஒரு முனிவன்

இந்த நிகழ்வுகளை கண்ட பொழுது புத்தர் மக்கள் படும் துயரங்களையும் துன்பத்தையும் கவனித்தார் இந்த மூன்று நிகழ்வுகளும் அவருக்கு பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

நான்காவது ஒரு முனிவர் தியான நிலையில் இருப்பதை கண்டு அவர் இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை அமைதி மட்டுமே நிரந்தரம் என்று உணர்ந்தார்.

இந்த நான்கு நிகழ்வுகளை கண்ட பொழுது புத்தர் அவர் மனதில் தோன்றியது. இவ்வுலகத்தில் நாம் வாழ்வதற்கு அர்த்தம் என்ன  அதை தேடி செல்லலாம் என்று நினைத்தார். அப்பொழுது அந்த தருணம் அவர் அரண்மனையை விட்டு வெளியேறினார்.

புத்தருக்கு அப்போது துறவறம் செல்லும் எண்ணம் இல்லை அவரின் நோக்கம் வாழ்க்கையின் அர்தத்தினை தெரிந்து கொள்வது மட்டுமே.

அரண்மனையை விட்டு வெளியே சென்று வெகு  தூரம் நடந்து கொண்டிருக்கும் போது முனிவர் ஒருவர் கடும் தவத்தைக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார். அப்பொழுது தாமும் கடுமையான தவம் மேற்கொண்டால் வாழ்க்கையும் அர்த்தம் புரியும் எனும் நோக்கத்துடன் கடுமையான தவத்தில் அமர்ந்தார் . நீர் மற்றும் உணவு ஆகாரம் எதுவும் இல்லாமல் அவர் கடுமையான தவத்தில் மேற்கொன்றார்.

 புத்தரின் தவத்தினை கண்ட சிலர் அவருக்கு சீடர்களாகவும் மாறினார். ஆனால் அப்போது கூட அவருக்கு விடை கிடைக்கவில்லை மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் கிடைக்கவில்லை. 

 கடுமையான தவம் செய்து கொண்டிருந்த புத்தர்  அங்கு,அன்று ஒரு இசை கலைஞர் சென்று கொண்டிருந்தார். அந்த இசை கலைஞரை பற்றி அவருடைய சீடரிடம் விசாரித்தார்.அப்பொழுது சீடன் அது ஒரு இசைக் கருவி அதன் பெயர் யாழ் என்று கூறினார்.

இந்த யாழை நன்றாக இழுத்து கட்டினால் அது அறுந்து  விடும் லேசாக கட்டினால் அதிலிருந்து எவ்வித இசையும் நமக்கு வராது என்று அவருடைய சீடர் கூறினார்.

அவ்வாறு அவருடைய சீடர் கூறியதும் புத்தர் ஒன்றை நன்றாக உணர்த்தார். தான் சிறுவயதிலிருந்து சுகமான இல்லற வாழ்க்கை மற்றும் ஆடம்பரமான ராஜா வாழ்க்கையை வாழ்ந்து பழகியவர்.திடீரென்று இவ்வாறு உடலை வருத்திக்கொண்டு தவம் இருப்பதால் அவருக்கு வாழ்க்கையில் அர்த்தம் தெரியப் போவது இல்லை. மாறாக அவர் உடல் மிகவும் வலிமை குறைந்து அவர் இறக்க நேரிடும் என உணர்த்துக் கொண்டார்.

அக்கணமே அவர்  அவர் தவத்திலிருந்து விடுபட்டு அருகில் இருந்தால் ஆற்றில் குளிப்பதற்காக சென்றார்.  அப்பொழுது ஆற்றில் உள்ள நீர் நீரின் வேகத்தை அவரால் சமாளிக்க முடியவில்லை. அவரின் உடல் எவ்வாறு வலிமை இல்லாமல் இருப்பதை அவர் மிகவும் தெளிவாக உணர்ந்தார் மற்றும் வாழ்வின் அர்த்தத்தை தேடிச் செல்ல முடிவெடுத்தார்.

பல ஊர்கள் நடந்து சென்று பல்வேறு இடங்களில் தியானத்தினை தொடர்ந்த்து செய்து வந்தார்.பீகார் மாநிலத்தில் கயை எனும் இடத்தில் ஒரு போதி மரம் உள்ளது.அந்த மரத்தின் அடியில் பல நாட்களாக தியானம் செய்து வந்தார்

போதி மரத்தடியில் தியானம் செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு திடீரென்று ஒரு மகிழ்ச்சி கிடைப்பதை உணர்ந்தார் அப்போது அவருடைய தேடுதலுக்கு பதில் கிடைத்ததாக மிகவும் சந்தோஷம் அடைந்தார். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்த தருணமாக அந்த தருணம் விளங்கியது “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்று ஒரு விடை அவருக்கு கிடைத்தது ,அந்த போதி மரத்தடியில் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுதுதான்.

வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்துக் கொண்ட புத்தர் அவர் தான் மட்டும் அந்த அர்த்தத்தை அறிந்து கொண்டு வாழ வேண்டும், என்று நினைக்காமல் தான் அறிந்த இந்த நோக்கத்தை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும், என்று மக்கள் அனைவருக்கும் இவர் அறிந்ததை போதித்தார். வாழ்க்கையின் துயரம் துறந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று புத்தர் பல போதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்தினார்.

இவரது போதனைகளை மூலம் ஈர்க்கப்பட்ட மக்கள் இவருக்கு தனியாக ஒரு சமூகத்தை உருவாக்கினார்கள் அதற்கு புத்தமதம்  என்று பெயர், வைத்து அவரது கொள்கை வழிகளை நடைமுறைப்படுத்தி அவர்கள் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்தார்கள்.

அன்று உருவானதே இந்த புத்தமதம் இன்று வரை புத்தமதத்தினை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் பின்பற்றி 

வருகின்றனர்.புத்தரின் சீடர்கள் அவரை சாக்கிய முனி என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

கி.மு.483ஆம் ஆண்டு தனது சீடர் ஒருவர் மூலம் விஷம் கலக்கப்பட்ட ஒரு உணவினை உண்டு அவர் இறந்தார் என்று அவரை பற்றிய  குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. 

 

Leave a Comment